Advertisment

மதுரை: டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sasasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார்  என்பவர் மீது டிபன் பாக்ஸ்  குண்டு வீசப்பட்டுள்ளது.

Advertisment

மதுரை மாவட்டம்  மேலூர் அருகே  உள்ள கீழளவு கிராமத்தில்  நள்ளிரவில்  நவீன்குமார்  என்பவர் மீது டிபன் பாக்ஸ்  குண்டு வீசப்பட்டுள்ளது. டிபன் பாக்ஸ் குண்டு  வீசப்பட்டதில் கார் அருகே  நின்றிருந்த நவீன் குமார்  காயமடைந்தார். குண்டு வீச்சில்  கையில் காயமடைந்த நவீன்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த குண்டு வீச்சு சம்பவத்தின்போது நவீன் குமாருக்கு அருகே நின்றிருந்த ஆட்டோ டிரைவர் கண்ணன் என்பவரும் லேசான காயம்  அடைந்துள்ளார். டிபன் பாக்ஸ் குண்டு வீசியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட, விசாரணையில், முன்விரோதம்  காரணமாக நவீன் குமார்  மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment