Advertisment

மறுகூட்டலில் மதிப்பெண் அதிகரித்தால் தேர்வு கட்டணம் ரிட்டன்? மதுரை உயர் நீதிமன்றம் குட்டு

மறுகூட்டலில் மதிப்பெண் அதிகரித்தால் தேர்வு கட்டணம் திரும்ப அளிக்க வேண்டும் என்ற மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை இன்று விசாரித்தது. அப்போது, “அரசின் சேவையை பயன்படுத்த கட்டணம் செலுத்துவதில் என்ன தவறு” எனக் கேள்வியெழுப்பியது.

author-image
WebDesk
New Update
Madurai Bench of Madras High Court questions over place to set up a Tasmac shop near schools and worship areas Tamil News

அரசின் சேவையை பயன்படுத்த கட்டணம் செலுத்துவதில் என்ன தவறு என மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வியெழுப்பியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அரசின் சேவையை பயன்படுத்த கட்டணம் செலுத்துவதில் என்ன தவறு என மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வியெழுப்பி உள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் அதிகரிக்கும்பட்சத்தில் அவர்களின் தேர்வு கட்டணங்களை திருப்பி செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அனைத்து மாணவர்களும் இதை பயன்படுத்த நினைத்தால் என்ன ஆகும்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள்.

தொடர்ந்து, “சிறுவர்கள் குறிப்பிட்ட நேரம் வரை செல்போன் பயன்படுத்தும் வகையில் ஒரு செயலி உருவாக்க வேண்டும். அந்த செயலி, குறிப்பிட்ட நேரத்தில் செல்போனை தானாகவே ஸ்விட்ச் ஆஃப் ஆகும் வகையில் இருத்தல் வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment