தமிழக வாகனங்களில் சாலை விதிகளை மீறிய நம்பர் பிளேட் வைத்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் வாகனம் ஓட்டுனர்கள் தங்களது நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் படங்களை ஓட்டுவது குறித்து போக்குவரத்து அலுவலர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மண்டல போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு விடுத்துள்ளது.
வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil