மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா உலகளவில் பிரசித்திப் பெற்றது. அதன்படி இந்தாண்டின் திருவிழா, கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவியத் துவங்கினர். கடந்த 17-ம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.
நேற்று தேரோட்டமும், தேர்தலும் ஒன்றாக நடைபெற்றது. வாக்குப்பதிவு பாதிக்கும் என எதிர்பார்த்த நிலையில், சென்னையை விட 3 சதவீத வாக்குகளை அதிகமாக பதிவு செய்திருக்கிறது மதுரை.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை நிற பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர். இதனை சுமார் 10 லட்சம் பக்தர்கள் கண்டு களித்தனர். இதனால் மதுரை விழாக்காலம் பூண்டது!