ஓய்வின்றி 72 மணிநேர வேலை: மதுரை கோட்டத்தில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்; ரயில்கள் தாமதம்

மதுரை ரயில்வே கோட்டத்தில் பணியாற்றும் லோகோ ஓட்டுநர்கள் கடுமையான பணிச்சுமை, காலியிடங்கள் நிரப்பப்படாதது மற்றும் போதிய ஓய்வின்மை ஆகியவற்றைக் கண்டித்து நேற்று உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் பணியாற்றும் லோகோ ஓட்டுநர்கள் கடுமையான பணிச்சுமை, காலியிடங்கள் நிரப்பப்படாதது மற்றும் போதிய ஓய்வின்மை ஆகியவற்றைக் கண்டித்து நேற்று உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
madurai railway

ஓய்வின்றி 72 மணி நேரம் வேலை: மதுரை ரயில்வே கோட்டத்தில் லோகோ டிரைவர்கள் வேலைநிறுத்தம்

மதுரை ரயில்வே கோட்டத்தில் பணியாற்றும் ரயில் ஓட்டுநர்கள் கடுமையான பணிச்சுமை, காலியிடங்கள் நிரப்பப்படாதது மற்றும் போதிய ஓய்வு வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைக் கண்டித்து நேற்று உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை கோட்ட ஓட்டுநர் பிரிவில் 625 பேர் செய்ய வேண்டிய பணிகளை தற்போது 500 பேர் மட்டுமே மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநர்கள் போதுமான ஓய்வு மற்றும் விடுப்பு இல்லாமல், மிகுந்த மன அழுத்தத்துடன் பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Advertisment

கடுமையான பணிச்சுமை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளில் 21 ஓட்டுநர்கள் மருத்துவத் தகுதியை இழந்தனர். மேலும், 52 வயதுடைய மூத்த ஓட்டுநர் ஒருவர் பணிச்சுமையால் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. ரயில்வே சட்டப்படி ஓட்டுநர்களுக்குக் குறைந்தது 16 மணி நேர ஓய்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், மதுரை கோட்டத்தில் பல ஓட்டுநர்கள் 72 மணி நேரம் வரையிலும் தங்கள் டிப்போவுக்குத் திரும்ப முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக பதவி உயர்வுகளும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், கடந்த ஜூன் 26-ஆம் தேதி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஒரு மாத காலத்திற்குள் புதிய பணிப் பட்டியலை வழங்குவதாக நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால், 2 மாதங்களாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், நேற்று 150-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மதுரையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, திருநெல்வேலியில் 40 பேரும், செங்கோட்டையில் 25 பேரும் போராட்டத்தில் இணைந்தனர். இந்தப் போராட்டத்தால் சில ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன, தாமதமாகச் சென்றன.

நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கோட்ட மேலாளரின் அறிவுறுத்தலின்பேரில் மூத்த மின் பொறியாளர் மஞ்சுநாத் யாதவ் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இன்று உதவி மேலாளர், அதிகாரிகளுடன் சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து, ஓட்டுநர்கள் தங்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர்.

Advertisment
Advertisements
Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: