மீண்டும் வைகை ஆற்றில் இறைச்சி கழிவுகள் - பொதுமக்கள் அதிர்ச்சி

ஆற்றங்கரையோரப் பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமி தொற்றுகள் பரவும் அபாயமும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆற்றங்கரையோரப் பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமி தொற்றுகள் பரவும் அபாயமும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Mdu wastes

மதுரையின் வைகை ஆற்றில் மீண்டும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இன்றும் நெல்பேட்டை பகுதியில் இறைச்சி கழிவுகள் சட்டவிரோதமாக ஆற்றில் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisment

மதுரை நெல்பேட்டை, உத்தங்குடி, கல்மேடு, அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கடைகள் மற்றும் சில்லறை வியாபாரிகளால் வெளியேற்றப்படும் கழிவுகள், எவ்வித கட்டுப்பாடும் இன்றி நேரடியாக வைகை ஆற்றில் கொட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதன் விளைவாக, ஆற்றங்கரையோரப் பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமி தொற்றுகள் பரவும் அபாயமும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தபோது, வைகை ஆற்றில் கழிவுகள் வீசிய இறைச்சிக் கடைகளுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் முழுமையாக அமல்படுத்தப்படாததாலோ அல்லது போதிய கண்காணிப்பு இல்லாததாலோ மீண்டும் மீண்டும் இதே நிகழ்வுகள் நடைபெற்று வருவது கவலையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் மதுரை மாநகராட்சியும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இணைந்து நடத்திய விரிவான ஆய்வில், வைகை ஆற்றில் மொத்தம் 177 இடங்களில் இறைச்சி கழிவுகள் மற்றும் கழிவுநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதில் 41 வெளியேறும் இடங்கள் மாநகராட்சி எல்லைக்குள்ளேயே இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

Advertisment
Advertisements

இன்று நெல்பேட்டை பகுதியில் வைகை ஆற்றங்கரையில் மீண்டும் இறைச்சி கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட சம்பவம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த செயல்களால் ஆற்றின் நீர் மாசுபடுவதுடன், நீர்வாழ் உயிரினங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: