வறுமையால் விபரீத முடிவு... தாய், மகள் பலி; மகன் கவலைக்கிடம்: மதுரையில் சோகம்

மதுரை மாவட்டத்தில் வறுமையின் பிடியில் சிக்கிய குடும்பம் தற்கொலைக்கு முயன்றதை தொடர்ந்து, தாய், மகள் இருவர் உயிரிழந்தனர், மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் வறுமையின் பிடியில் சிக்கிய குடும்பம் தற்கொலைக்கு முயன்றதை தொடர்ந்து, தாய், மகள் இருவர் உயிரிழந்தனர், மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai mother daughter dies son in serious condition poisoned due to poverty Tamil News

மதுரை மாவட்டத்தில் வறுமையின் பிடியில் சிக்கிய குடும்பம் தற்கொலைக்கு முயன்றதை தொடர்ந்து, தாய், மகள் இருவர் உயிரிழந்தனர், மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அனுப்பானடி தாயுமான தெருவை சேர்ந்த ஜீவகுமாரி. கணவரை இழந்த இவர், கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட இதய நோயால், தொடர்ந்து வேலை செய்ய முடியாத நிலையில் அவர் வீடிலேயே இருந்தார். இதனால் குடும்பத்தில் வருமானம் முற்றிலும் குறைந்து, கடும் வறுமை நிலவியது.

Advertisment

இந்த கடும் நிலைமையில் மன உளைச்சலால் தற்கொலைக்கு முடிவெடுத்த ஜீவகுமாரி, தனது மகள் இன்பலட்சுமி மற்றும் மகன் சிங்கபெருமாளுடன் விஷம் அருந்தினார். இந்த தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், ஜீவகுமாரியும், இன்பலட்சுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சிங்கபெருமாள் தீவிர சிகிச்சையில் உயிருடன் போராடி வருகிறார். இந்த சம்பவம் பகுதிச் சனத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வறுமையால் உயிரிழக்கும் நிலைக்கு ஆட்கள் தள்ளப்படுவது நம் சமூகத்தின் வேதனையானது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் நினைவூட்டுகிறது.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: