/indian-express-tamil/media/media_files/2025/06/22/madurai-murugan-2025-06-22-23-41-18.jpg)
மதுரை பாண்டிகோவிலில் இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்று வரும் முருக பக்தர்கள் மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது முன்வைக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தமானது என தெரிவிக்கப்பட்டு, முருகன் மலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களில் இருந்து சமய அறநிலைத்துறை விலக வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து, வாக்கு வங்கியை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
சஷ்டி தினத்தன்று அனைத்து முருக பக்தர்களும் ஒன்றாக சேர்ந்து சஷ்டி கவசம் பாட வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டது.
இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மதுரையில; நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் அனுமதிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தேர்தல் தொடர்பான அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டது என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.