Chennai News Live Updates: நீட் என்பது முதல் கோணல் முற்றிலும் கோணல்: ஸ்டாலின் விமர்சனம்

Tamil Nadu News Update Today 23 June 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update Today 23 June 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CM MK Stalin nilgiri

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jun 23, 2025 17:56 IST

    நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல்: ஸ்டாலின்

    நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார். நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் குறித்து தங்கள் எஜமானர்களிடம் பேச அதிமுகவினருக்கு நேரமோ, மானமோ இல்லை என்றும் கூறினார்.



  • Jun 23, 2025 17:37 IST

    "காவலர்கள் பதவி உயர்வு உத்தரவை திரும்பப்பெற வேண்டும்"

    தமிழகக் காவல்துறை காவலர்களிடையே பாரபட்சம் காட்டும் வகையில் வெளியிட்ட பதவி உயர்வு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.



  • Advertisment
  • Jun 23, 2025 17:35 IST

    தாம்பரத்தில் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்ற இளைஞர்

    தாம்பரம் ரயில்வே பணிமனை அருகே தண்டவாளத்தில் இன்று மின்சார ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்பகுதிக்கு இன்று மது, கஞ்சா குடித்து விட்டு போதையில் வந்த வடமாநில இளைஞன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்றான். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப்படையினர் வடமாநில இளைஞனை சுற்று வளைத்து பிடித்தனர். மேலும், ரயிலை ஓட்டிச் செல்ல மேற்கொண்ட முயற்சியையும் தடுத்து நிறுத்தினர். கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.



  • Jun 23, 2025 17:27 IST

    ஈரானுக்கு உதவ தயார்: ரஷியா அறிவிப்பு

    ஈரானுக்கு உதவ தயராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷிய அதிபர் மாளிகை கூறியிருப்பதாவது: ஈரானுக்கு என்ன தேவையோ அதை பொறுத்து செய்வோம். பேச்சுவார்த்தைக்குக்கு உதவ தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Jun 23, 2025 16:41 IST

    மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்து அதிமுக விளக்கம்

    முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அதிமுகவைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை. தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். உள்நோக்கம் எதுவும் இல்லை அதிமுக தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.



  • Jun 23, 2025 16:31 IST

    ஸ்ரீநகர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லியில் தரையிறக்கம்

    தலைநகர் டெல்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு இன்று எர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். விமானம் ஜம்முவில் தரையிறங்கி அங்கிருந்து மீண்டும் காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு செல்ல திட்டமிட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், விமானம் ஜம்முவில் தரையிறக்க முற்பட்டது. ஆனால், தரையிறங்குவதற்கான முயற்சி தோல்வியடைந்ததால் விமானம் மீண்டும் டெல்லி திரும்பி சென்றது. பின்னர், டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. 



  • Jun 23, 2025 16:10 IST

    வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிங்கமுத்துவுக்கு அபராதம்

    அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்தது. நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதிப்பு. தன்னைப் பற்றி நடிகர் சிங்கமுத்து அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்டஈடு கோரி வடிவேலு வழக்கு தொடர்ந்திருந்தார். வடிவேலுக்கு எதிராக இனிமேல் அவதூறு கருத்தை தெரிவிக்க மாட்டேன் என்று நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்துள்ளார்.



  • Jun 23, 2025 16:08 IST

    போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்த் கைது

    முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடமிருந்து போதைப்பொருள் வாங்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் ஸ்ரீகாந்திற்கு சம்மன் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தினர். மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Jun 23, 2025 15:50 IST

    சென்னை த.வெ.க பேனர் விழுந்ததில் முதியவர் காயம்

    த.வெ.க மத்திய மாவட்ட தலைமை அலுவலக திறப்பிற்கு வைத்த பேனர் முதியவர் தலையில் விழுந்ததில் முதியவர் காயம்

    முறையாக அனுமதி பெறாமல் பேனர் வைத்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது



  • Jun 23, 2025 15:37 IST

    அண்ணா மீதான விமர்சனம் - ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

    அண்ணாவை விமர்சிப்பதை அதிமுக ரசிக்கிறது என்றால், உங்கள் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விட தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்து விட்டார்கள். அதிமுகவில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இந்த அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு மட்டும் நீங்கள் வந்து விடாதீர்கள். அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கேஅமித்ஷாவை வைத்து விட்டீர்களா? - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி



  • Jun 23, 2025 15:36 IST

    அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு

    மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின்  சகோதரர் அசோக் குமார் மனு.

    ஜூன் 30ம் தேதி பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு



  • Jun 23, 2025 15:03 IST

    தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

    Credit: Sun News



  • Jun 23, 2025 15:01 IST

    தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

    இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்

    சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கமான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வது பலனளிக்கவில்லை என்பதால், குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது எனக்கூறி தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு



  • Jun 23, 2025 14:44 IST

    ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி

    நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள்  பயன்படுத்தியதை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்தது காவல்துறை.



  • Jun 23, 2025 14:20 IST

    நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் பயன்படுத்தினார்: பிரதீப் வாக்குமூலம்

    நடிகர் ஸ்ரீகாந்த்தும் மற்றொரு நடிகரும், பிரசாத் மூலமாக என்னிடம் இருந்து கொக்கைன் பெற்றனர். நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் இன்னொரு நடிகர் கொக்கைன் பயன்படுத்தியதை நேரடியாகவே பார்த்துள்ளேன்.

    பிரசாத்திற்கு 40 முறை போதைப்பொருள் விற்று ரூ.5 லட்சம் வரை சம்பாதித்ததாக பிரதீப் வாக்குமூலம்



  • Jun 23, 2025 13:46 IST

    கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம்

    சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் பொறுப்பில் இருந்து மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் நீக்கம் செய்யப்பட்டு, சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்பில் இருந்து ராமதாஸ் தொடர்ச்சியாக நீக்கி வருகிறார்.



  • Jun 23, 2025 13:45 IST

    பேருந்து பயணத்தின்போது துண்டான சிறுவன் தலை

    உத்திரபிரதேசத்தின் ஹாத்ரஸ் பகுதியில், பேருந்து பயணத்தின் போது வெளியே தலையை நீட்டியதால் 11 வயது சிறுவனின் தலை துண்டனது. திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற பேருந்தில் அமர்ந்து பயணம் செய்த போது பேருந்துக்கு வெளியே சிறுவன் தலையை நீட்டியபோது பக்கத்தில் வந்த மற்றொரு வாகனம் மோதி சிறுவன் தலை துண்டானது சிறுவன் உடல் பேருந்துக்குள் இருக்க, தலை துண்டாகி கீழே விழுந்ததால் அதிர்ச்சி



  • Jun 23, 2025 13:43 IST

    காவல்துறை விசாரணைக்கு ஆஜராக ஹெச்.ராஜாவுக்கு உத்தரவு

    திருப்பரங்குன்றம் மலை விவகாரம் - மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்,காவல் துறை விசாரணைக்கு ஆஜராக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகக் கூறி காவல் துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஹெச்.ராஜா தாக்கல் செய்த மனு தள்ளுபடிவிசாரணைக்கு ஆஜராகக் கூறி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. உயர் நீதிமன்றம்விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க ஹெச்.ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு



  • Jun 23, 2025 12:57 IST

    ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு

    ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா - 24வது பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுற்றாண்டு விழா. பேரூர் ஆதீன மடத்தில் பாரம்பரிய சிவ வேள்வி பூஜை. எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் நல்லறம் அறக்கட்டளை நிறுவனர் அன்பரசு ஆகியோர் பங்கேற்பு. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கௌரவிப்பு. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேரூர் ராமசாமி அடிகளார் காலில் விழுந்து வணங்கினார்.



  • Jun 23, 2025 12:52 IST

    "நான் ஈ படம் காப்பி“ - “லவ்லி“ படக்குழுவுக்கு நோட்டீஸ் 

    2012ஆம் ஆண்டு வெளியான “நான் ஈ“-ஐ காப்பியடித்ததாக குற்றச்சாட்டு லவ்லி படக்குழுவுக்கு “நான் ஈ“ தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் படத்தில் பயன்படுத்தப்பட்ட 'ஈ'யின் உருவ அமைப்பு, 'நான் ஈ' படத்தில் பயன்படுத்தப்பட்டது உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது “நான் ஈ பட தயாரிப்பு தரப்பிலிருந்து இப்படி ஒரு நோட்டீஸ் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. லவ்லி நாயகி உன்னி மாயா பிரசாத்தின் முகத்தை அடிப்படையாக வைத்து தான் லவ்லி படத்தில் வரும் 'ஈ'யின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது என லவ்லி' இயக்குநர் தினேஷ்



  • Jun 23, 2025 12:45 IST

    போதைப்பொருள் விவகாரம் - நடிகர் ஸ்ரீகாந்த்திடம் விசாரணை

    முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்த்திடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். ஸ்ரீகாந்த்திற்கு சம்மன் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை.  ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த நபர், பிரதீப் குமார் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Jun 23, 2025 11:42 IST

    காவல்துறை நோட்டீஸை எதிர்த்து ஹெச். ராஜா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

    மத மோதலை தூண்டும் விதமாக பேசியதாக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராகக் கோரி காவல்துறை தரப்பில் இருந்து அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச். ராஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.



  • Jun 23, 2025 11:19 IST

    மாம்பழங்களுக்கு ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும் - சீமான்

    மாம்பழங்களுக்கு ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். மேலும், "பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். மாம்பழங்கள் அதிகம் விளைந்தும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • Jun 23, 2025 11:03 IST

    பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி

    பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். அதன்படி, "சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு, பவன் கல்யாண் வெற்றிபெற்று காண்பிக்கட்டும். பிறகு, என்ன வேண்டுமானாலும் அவர் பேசலாம். பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 23, 2025 10:47 IST

    ஜூன் 25-ஆம் தேதி ரயிலில் பயணம் செய்யும் ஸ்டாலின்

    ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக, நாளை மறுநாள் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக காட்பாடிக்கு அவர் செல்கிறார். அதன் பின்னர், கள ஆய்வை முடித்து விட்டு ஜூன் 26-ஆம் தேதி திருப்பத்தூரில் இருந்து ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.



  • Jun 23, 2025 10:21 IST

    'பா.ஜ.க-விற்கு, அ.தி.மு.க அடிமை சாசனம் எழுதிகொடுத்து விட்டது'; அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

    பா.ஜ.க-விற்கு, அ.தி.மு.க அடிமை சாசனம் எழுதிகொடுத்து விட்டது என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அண்ணா மற்றும் பெரியார் போன்றோரை விமர்சனம் செய்தவர்கள் இருக்கும் மேடையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்துள்ளனர். பா.ஜ.க-விற்கு, அ.தி.மு.க அடிமை சாசனம் எழுதிகொடுத்து விட்டது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 23, 2025 09:44 IST

    ஈரானில் இலக்குகளை முடிக்க இஸ்ரேல் 'மிக மிக நெருக்கமாக' உள்ளது

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை, ஈரானில் எங்கள் இலக்குகளை முடிக்க நாங்கள் "மிக மிக நெருக்கமாக" இருக்கிறோம் என்று கூறினார்.

    "இந்த இலக்குகளை அடைவதில் நாங்கள் படிப்படியாக முன்னேறி வருகிறோம், அவற்றை நிறைவேற்றுவதற்கு "மிக நெருக்கமாக" இருக்கிறோம்" என்று அவர் ஒரு ஊடக உரையில் கூறினார்.

    அமெரிக்க அதிபரை இஸ்ரேலின் மாபெரும் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் என்று அழைத்த நெதன்யாகு, ஈரானில் உள்ள ஃபோர்டோ அணு உலைக்கு "கடுமையான அடி" கொடுத்ததற்காக டிரம்ப்பை பாராட்டினார்.

    "ஃபோர்டோ அணு உலையில் கடுமையான அடியை ஏற்படுத்திய அமெரிக்கா மற்றும் அதன் இராணுவம் மற்றும் விமானப்படையின் சிறந்த பணிக்காக இஸ்ரேலின் சிறந்த மற்றும் நெருங்கிய நண்பரான ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்."

    அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகிய இரண்டு முக்கிய அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காகவே ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இந்த நடவடிக்கையைத் தொடங்கியது என்று அவர் மேலும் கூறினார்.

    "ஈரான் இஸ்ரேலின் இருப்பை அழிக்க விரும்பும் ஒரு ஆட்சி என்பதில் சந்தேகமில்லை," என்று அவர் கூறினார்.



  • Jun 23, 2025 09:43 IST

    தட்கல் டிக்கெட் - ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்

    தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC நிறுவனம். IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவேற்ற பயனர்களுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.  ஜுலை 1 முதல் ஆதார் OTP அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • Jun 23, 2025 09:17 IST

    சாலைப் பணிகள் காரணமாக கனரக வாகனங்கள் கர்நாடகாவுக்கு செல்ல தடை

    தமிழ்நாடு எல்லையை ஒட்டிய கர்நாடக பகுதிகளில் சாலைப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் கர்நாடகாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளேகால் தாலுகா நால்ரோடு முதல் தமிழ்நாட்டு எல்லையான கர்கேகண்டி வரை சாலைப்பணிகள் நடைபெறுவதால் கனரக வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என சாம்ராஜ் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. 



  • Jun 23, 2025 09:13 IST

    “தேர்தல் முடிவை பொறுத்தே படம் என விஜய் கூறினார்” - நடிகை மமிதா பைஜூ

    திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பது குறித்து தேர்தல் முடிவுகளை பொறுத்து முடிவு செய்வேன் என விஜய் கூறினார். ஜனநாயகன் தான் கடைசி படமா என நடிகர் விஜயிடம் தான் கேட்டபோது அவர் கூறியதாக நடிகை மமிதா பைஜூ நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். 



  • Jun 23, 2025 08:57 IST

    வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பயணம் செய்யும் தனது குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கிறது

    அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் அதன் தளங்களைத் தாக்கும் அபாயங்கள் சூழ்ந்துள்ளதால், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அதன் குடிமக்களுக்கு உலகெங்கிலும் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Jun 23, 2025 08:56 IST

    காவலருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரிடம் விசாரணை

    நெல்லையில் சிறார் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தும் நெல்லை காவல்துறை. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் 5 பேரை பிடித்தது காவல்துறை. காயம் அடைந்த காவலர் முகமது ரஹ்மதுல்லா, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி. வ.உ.சி திடலில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்ற போது காவலருக்கு அரிவாள் வெட்டு.



  • Jun 23, 2025 08:55 IST

    விமான சேவை குறைப்பு

    சர்வதேச விமான சேவையை 5 சதவீதம் குறைப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு, தொழில்நுட்ப கோளாறு என தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் விமான சேவையை குறைத்தது ஏர் இந்தியா.



  • Jun 23, 2025 08:53 IST

    கண்ணாடி பாட்டில்களால் ஆபத்து

    பிளாஸ்டிக் பாட்டில்களை காட்டிலும் கண்ணாடி பாட்டில்களில் அதிகளவில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மதுபானங்கள் இருக்கும் கண்ணாடி பாட்டில்களில் ஒரு லிட்டருக்கு 100 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.



  • Jun 23, 2025 08:49 IST

    ஈரானின் பாதுகாப்பு நலன்களை அமெரிக்கா சுரண்டியது: வட கொரியா

    வட கொரிய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அரசு ஊடகத்திற்கு வெளியிட்ட அறிக்கையில், இறையாண்மை கொண்ட ஈரானின் பாதுகாப்பு நலன்களை அமெரிக்கா சுரண்டியது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.



  • Jun 23, 2025 08:28 IST

    சத்துணவு கூடத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள கரிய சோலை அரசு உயர்நிலை பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம். மாணவர்களுக்கு உணவு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மூட்டைகள், அரிசி உள்ளிட்டவை வெளியே வீசி நாசம் செய்தது. வனத்துறையினர் யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Jun 23, 2025 08:28 IST

    இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடக்கம்

    குஜராத்தின் காடி மற்றும் விசாவதர், கேரளாவின் நிலாம்பூர், பஞ்சாப்பில் லூதியானா மேற்கு மற்றும் மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்பட்டது.



  • Jun 23, 2025 08:27 IST

    போர் பதற்றம் - கவிஞர் வைரமுத்து பதிவு

    "ஈரானின் அணுசக்தித் தளங்களில் டொமாஹக் ஏவுகணைகள் வீசி அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா,  வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி"  என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.



  • Jun 23, 2025 08:23 IST

    சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்-20 பேர் உயிரிழப்பு

    சிரியா டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல்.



  • Jun 23, 2025 08:09 IST

    மூலதன சந்தைகள் 'சமாளிக்க தயாராக உள்ளன', தாய்லாந்தின் நிதியமைச்சர் கூறுகிறார்

    மத்திய கிழக்கில் நடந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் அமெரிக்காவும் சேர்ந்ததற்கு உலகளாவிய சந்தையின் முதல் எதிர்வினையைக் குறிக்கும் வகையில், திங்களன்று அதிகாலை சந்தைகள் திறக்கப்பட்டவுடன் ஆசிய பங்குகள் சரிந்தன.

    தாய்லாந்தின் நிதியமைச்சர், மூலதன சந்தை வலுவாக உள்ளது மற்றும் பதட்டங்களுக்கு மத்தியில் நிலையற்ற தன்மையை சமாளிக்க "தயாராக உள்ளது" என்று கூறினார்.

    எக்ஸ் பற்றிய ஒரு பதிவில், சுந்தர் பிச்சை சுன்ஹாவஜிரா, பங்குச் சந்தை இந்த வாரம் பங்கு விலை இயக்க வரம்புகளை குறைக்கும் என்று கூறினார்

    "தாய்லாந்து பங்குச் சந்தை ஜூன் 23 முதல் 27 வரை தினசரி வர்த்தக வரம்பை 30% இலிருந்து 15% ஆகக் குறைக்கும்" என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.



  • Jun 23, 2025 07:42 IST

    காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Jun 23, 2025 07:42 IST

    ஜூன் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    ஜூன் 28 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Jun 23, 2025 07:40 IST

    ஜெகன் மோகன் குற்றவாளியாக சேர்ப்பு

    ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி ஒருவர் உயிரிழந்தனர். விபத்து வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி, அவரின் உதவியாளர் ராகேஸ் ரெட்டி, முன்னாள் எம்பி சுப்பா ரெட்டி உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Jun 23, 2025 07:38 IST

    இந்தியாவுக்கு பாதிப்பா..?

    கச்சா எண்ணெய் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் கடல் வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினால் இந்தியா பாதிக்கப்படுமா? இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகம் தடையின்றி கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்யா, அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



  • Jun 23, 2025 07:34 IST

    சிறுவனை கடித்த தெருநாய்

    சென்னை ராமாபுரம் திருவள்ளூர் சாலையில், தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் ரித்விக்கை கடித்த தெரு நாய். சிறுவன் மருத்துவமனையில் அனுமதி. ராமாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jun 23, 2025 07:34 IST

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்

    ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம். நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் உத்சவ ஆச்சாரியார் சிவகைலாஸ் தீட்சிதர் வேத மந்திரங்கள் முழங்க மேள, தாளங்களுடன் கொடியேற்றப்பட்டது. வருகிற ஜூலை 1ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.



Tamil News Live Update Tamilnadu News Latest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: