மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை : பின்னணி என்ன?

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் எனப்வர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் எனப்வர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasaesa

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி  பாலசுப்பிரமணியன் எனப்வர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
நாம் தமிழர் கட்சியின் துணைச் செயலாளர் பாலசுப்பிமணியன் வல்லபாய் சாலை பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் காவல் துறையினர் பாலசுப்பிமணியன் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
பாலசுப்பிரமணியன் மீது சில குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை  ஏற்படுத்திய நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: