/indian-express-tamil/media/media_files/2025/03/20/gGvfd8OfxR7uZtYFCp3S.jpg)
மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட கோர விபத்தில் சம்ப இடத்திலே ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட கோர விபத்தில் சம்ப இடத்திலே ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையிலிருந்து மதுரை நோக்கி 7 பேர் கார் ஒன்றில் பயணித்துள்ளனர். அப்போது, பழுதாகி பாலத்தின் மீது நின்றிருந்த லாரியின் பின்னே வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஓட்டுநர் மதியழகன் (39) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் பயணித்த இரு குழந்தைகள் உட்பட மீதமுள்ள ஆறுபேர் பலத்த காயங்களுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு செய்யப்பட்டுள்ளனர். வேகமாக செல்லும் வாகனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில், விபத்தினால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பான தகவல் அறிந்து விரைந்த போக்குவரத்து காவல்துறையினர், வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.