Advertisment

டங்ஸ்ட்ன் எதிர்ப்பு பேரணியில்: 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் மீது வழக்குப் பதிவு

டங்ஸ்ட்ன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக மதுரையில் பேரணி மேற்கொண்ட 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
 Madurai police FIR farmers women rally against Tungsten mining project Tamil News

டங்ஸ்ட்ன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக மதுரையில் பேரணி மேற்கொண்ட 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை அருகே உள்ள மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், மேலூர் முல்லை பெரியாறு ஒருபோக பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வலியுறுத்தியும் பொதுமக்கள், விவசாயிகள் போராடி வருகிறார்கள். மேலூர் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள், கிராம மக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் நேற்றைய தினம் (ஜன.7) பேரணியாக மேலூரில் இருந்து மதுரை தமுக்கம் தபால் நிலையம் வரை சென்றனர்.

Advertisment

இந்த பேரணியின் போது, சுங்கச்சாவடி அருகே போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் முன்னே செல்ல, அணிவகுப்பை தொடர்ந்து போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர். இந்தப் பேரணியின் எதிரொலியாக, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. 

இந்நிலையில், கட்டுப்பாடுகளை மீறி பேரணி சென்றதாக போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். பேரணியின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை வீடியோ காட்சிகள் மூலம் அடையாளம் காணும் பணியிலும் போலீசார் இறங்கி உள்ளனர்.

Protest Farmers Protest Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment