பங்குச்சந்தை முதலீடு எனக் கூறி மோசடி: ரூ. 24 கோடியை இழந்த பொதுமக்கள்

மதுரையில், பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ. 24 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில், பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ. 24 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Mdu fraud

மதுரையில், பங்குச்சந்தையில் முதலீடு செய்து தருவதாகக் கூறி தாங்கள் ஏமாற்றப்பட்டதாக ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

Advertisment

குறிப்பாக, இன்று (ஏப்ரல் 8) காலை பொதுமக்கள் பலர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். அதன்படி, பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் சுமார் இரண்டு மடங்கு லாபம் பார்க்கலாம் என்று கூறி மூன்று நபர்கள் தங்களை ஏமாற்றியதாக அவர்கள் புகாரளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சுமார் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை இழந்துள்ளதாக கூறுகின்றனர். மொத்தமாக ரூ. 24 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இந்நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: