மதுரையில் மாணவர் விடுதியில் ராகிங்: பாதுகாவலர் சஸ்பெண்ட்

விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவரை சில மாணவர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கியதாக புகார் மதுரையில் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவரை சில மாணவர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கியதாக புகார் மதுரையில் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
madurai hostel

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்ப கல்வி நிலைய மாணவர் விடுதியில் ராகிங் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவனை, அதே விடுதியில் வசித்த சில மாணவர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சம்பவம் தொடர்பாக போலீசார் மூன்று மாணவர்களை அடையாளம் காண்பித்து, அவர்கள்மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேசமயம், அவர்கள் கல்வி நிலையத்தால் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விடுதிக்கு பாதுகாப்பாக இருந்த பாதுகாவலர் பாலமுருகனும் தனது கடமையை உரிய முறையில் பூர்த்தி செய்யவில்லை என்ற காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்த விடுதியை மாவட்ட கல்வி அதிகாரி ஜவஹர் நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: