பராமரிப்பு பணிகள் ஒத்திவைப்பு- ராமேஸ்வரம் பயணிகளுக்கு இனி நிம்மதி: ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்

தெற்கு ரயில்வேயின் கீழ் மதுரை-ராமேஸ்வரம் ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகளால், மின்சார இன்ஜின் ரயில்களை அதிவேகமாக இயக்க முடியும்.

தெற்கு ரயில்வேயின் கீழ் மதுரை-ராமேஸ்வரம் ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகளால், மின்சார இன்ஜின் ரயில்களை அதிவேகமாக இயக்க முடியும்.

author-image
WebDesk
New Update
train x2

Madurai Rameswaram train railway electrification Madurai railway division

மதுரை- ராமேஸ்வரம் ரயில் பாதை மின் மயமாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisment

தெற்கு ரெயில்வே சார்பில், மின்சார இன்ஜின் ரெயில்களை அதிவேகமாக இயக்குவதற்கான மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு பகல் 12 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56724) ரத்து செய்யப்பட்டு, மாலை 3.30 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

அதேபோல், திருச்சி–ராமேஸ்வரம் ரெயில் (வண்டி எண்: 16849) மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்பட்டு, பின்னர் மானாமதுரையிலிருந்து திருச்சி நோக்கி புறப்பட்டு வந்தது.

ஆனால், (ஆக.27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மேற்கண்ட ரெயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: