/indian-express-tamil/media/media_files/2024/11/28/PnhmFLVymlerXO9RwqLG.jpg)
வருவாய்த் துறை அலுவலர்கள் ஸ்டிரைக்
மதுரையில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் 2-ஆம் நாளாக பணி புறக்கணிப்பு காத்திருப்புப் போராட்டம்..
வருவாய்த் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமன உச்சவரம்பை மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை முதல் பணி புறக்கணிப்பு, காத்திருப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இதன்படி, மதுரை மாவட்டத்தில் 2-ஆம் நாளாக நேற்றும் புதன்கிழமை வருவாய்த் துறை அலுவலர்கள் பணிகளைப் புறக்கணித்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் வருவாய்த் துறை அலுவலர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மதுரை மாவட்ட ஆட்சியரக வருவாய்த் துறை நிர்வாகப் பிரிவு உள்பட பல வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.