/indian-express-tamil/media/media_files/EuCHzvSn7REC0dGO5CGo.jpeg)
மதுரையில் உள்ள மூன்று பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நரிமேடு பகுதிகள் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் அனுப்பானடி பகுதியில் உள்ள வேலம்மாள் பள்ளி, பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு இன்று காலை 8 மணி அளவில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து மூன்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக காவல்துறைக்கு புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவிகளோடு மூன்று பள்ளிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனைகள் முடிவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள தகவல் புரளி என்று தெரிய வந்துள்ளது. காலாண்டு தேர்வு முடிவடைந்து பள்ளி விடுமுறையில் இருப்பதால் மாணவ மாணவிகள் யாரும் இல்லை என்பதால் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லை.
அதேநேரம் மின்னஞ்சலை யார் அனுப்பினார்கள் என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.