திருப்பரங்குன்றம் கோவிலில் நவராத்திரி விழா எப்போது? நிர்வாகம் அறிவிப்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா நடைபெறும் தேதி அறிவிப்பு; விழாவிற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகம் தீவிரம்,

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா நடைபெறும் தேதி அறிவிப்பு; விழாவிற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகம் தீவிரம்,

author-image
WebDesk
New Update
Thirupparankundram Temple

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழா இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Advertisment

விழா காலத்தில் தினமும் கோவர்த்தனாம்பிகை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். முதல் நாளான செப்டம்பர் 23 ஆம் தேதி ராஜ ராஜேஸ்வரி அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து செப்டம்பர் 26 ஆம் தேதி பாட்டாபிஷேகம், செப்டம்பர் 27 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும்.

நவராத்திரி விழாவைத் தொடர்ந்து பசுமலையில் உள்ள மண்டபத்திற்கு சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி, அம்புவிடும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான நிகழ்வாக அக்டோபர் 2 ஆம் தேதி மாலை, கோயிலிலிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் வெள்ளியிலான வில், அம்பு ஏந்தியபடி சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு பசுமலை சென்றடைந்து அம்புவிடும் நிகழ்வில் பங்கேற்பார்.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி தலைமையில், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Thirupparankundram Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: