2 பெண்கள் உட்பட 3 பேர் தற்கொலை: மதுரையில் பெரும் சோகம்

மதுரையில் மன உளைச்சல் மற்றும் குடும்பத் தகராறுகள் காரணமாக 2 பெண்கள் உட்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் மன உளைச்சல் மற்றும் குடும்பத் தகராறுகள் காரணமாக 2 பெண்கள் உட்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai Three Die By Suicide Including 2 women Tamil News

மதுரையில் மன உளைச்சல் மற்றும் குடும்பத் தகராறுகள் காரணமாக 2 பெண்கள் உட்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் மன உளைச்சல் மற்றும் குடும்பத் தகராறுகள் காரணமாக 2 பெண்கள் உட்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் சிவப்பிரியா (42). குடும்ப சொத்து விவகாரம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த இவர், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், மதுரை மாடக்குளம் தெருவை சேர்ந்த ரஞ்சித் குமாரின் மனைவி பவித்ரா (26), கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று தனது வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து எஸ். எஸ். காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மதுரை சிந்தாமணி புது தெருவை சேர்ந்த ஞானசேகர் (40), மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இந்த மன வேதனையில் நேற்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு உயிரிழந்தார். கீரைத்துறை போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

 

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: