/indian-express-tamil/media/media_files/dzoR4RQPcMYX3p6ewrW6.jpg)
மதுரையிலிருந்து சென்னை செல்லும் 3 விமானங்கள் ரத்து; தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 3 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இலங்கை, ஹைதராபாத் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் முக்கிய விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகளும் இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 5, இரவு 8.15 மற்றும் இரவு 9 மணிக்கு சென்னை செல்லக்கூடிய 3 விமானங்கள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரையில் இருந்து சென்னை செல்லும் 2 இண்டிகோ விமானங்கள், ஒரு ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், மதுரையில், இருந்து கொழும்பு, ஐதராபாத் செல்லும் விமானங்களும் 5 மணி நேரம் தாமதமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.