இமானுவேல் சேகரன் நினைவு தினம்: மதுரையில் நாளை மதுக்கடைகள் மூடல்

இமானுவேல் சேகரானாரின் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடப்படுகிறது. டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைத்து இயங்கும் மதுபான பார்களும் நாளை மூடப்படுகிறது.

இமானுவேல் சேகரானாரின் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடப்படுகிறது. டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைத்து இயங்கும் மதுபான பார்களும் நாளை மூடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
immanuel sekaran

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 11-ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உரிமம் பெற்ற தமிழ் நாடு மாநில வாணிபக் கழக (TASMAC) மதுபான சில்லரை விற்பனைக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Advertisment

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டும் அதே நடைமுறையை பின்பற்றுவதற்காக அதிகாரிகள் கடுமையான அறிவுறுத்தல்கள் பிறப்பித்துள்ளனர்.

அதேபோல், மதுவிற்பனை தொடர்பான விதிமீறல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனால், 11-ம் தேதி மதுரை மாவட்டம் முழுவதும் எந்தவித மதுபான விற்பனையும் நடைபெறாது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: