Coimbatore, Madurai, Trichy News: பரமத்திவேலூர் அருகே கார் மீது லாரி மோதி 2 பேர் பலி

Coimbatore, Madurai, Trichy News: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dead

மேட்டூர் அணையின் நீர்மட்டம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 230 நாட்களாக 100 அடிக்கும் குறையாமல் இருக்கிறது, இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் 12-ந் தேதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

  • Jun 09, 2025 18:35 IST

    த.வெ.க.வில் 7-ம் கட்டமாக 6 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

    த.வெ.க.வில் 7-ம் கட்டமாக 6 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.



  • Jun 09, 2025 18:11 IST

    தனுஷ்கோடியில் ஆண் சடலம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி-அச்சல் முனை இடையே தென்கடல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலமும் கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 



  • Advertisment
  • Jun 09, 2025 18:10 IST

    ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு - அபராதம்

    பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 7 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம் அல்லது சிறை தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jun 09, 2025 17:48 IST

    மதுரை எலியார்பத்தி சுங்க கட்டண வசூல் தடை ஆணை நீக்கம்

    மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடிக்கு கட்டண வசூல் செய்ய ஐகோர்ட் விதித்த தடை ஆணை நீக்கப்பட்டது. ஐகோர்ட் விதித்த தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியதை அடுத்து மீண்டும் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. மதுரை தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி உள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Jun 09, 2025 17:30 IST

    அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி

    கடலூரில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி பாஸ்கரன் (60), அவரது மனைவி அனுசுயா (56) ஆகியோரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



  • Jun 09, 2025 17:29 IST

    தி.மலை கோயில் குளம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

    திருவண்ணாமலை கோயில் தாமரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் நியமனம் செய்யப்பட்டார். ஆக்கிரமிப்பு கட்டுமானங்களில் இருந்து மனிதக் கழிவு குளத்தில் திறந்து விடப்படுவதாக யானை ராஜேந்திரன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்புகளை அரசு கண்டறிந்து 46 வாரம் கடந்தும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐகோர்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு எந்த ஆவணத்தின்படி மின் இணைப்பு தரப்பட்டது என மின்வாரியம் பதில் தர ஆணையிட்ட நிலையில், வழக்கின் விசாரணையை ஜூன் 26ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.



  • Jun 09, 2025 17:29 IST

    சங்கராபுரம் காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்ய ஆணை

    நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2024 மார்ச்சில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி 2024 உத்தரவை அமல்படுத்தாத ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Jun 09, 2025 17:15 IST

    திருப்புவனம்: விஷம் குடித்து புதுமண தம்பதி தற்கொலை

    திருப்புவனம் அருகே திருமணமான 2 மாதங்களில் இளம் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Jun 09, 2025 17:10 IST

    ஊத்தங்கரை: 3 பைக்குகள் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

     கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 3 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 2 பேர் இறந்த நிலையில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Jun 09, 2025 17:09 IST

    நெல்லை அருகே மரப்பொருட்கள் குடோனில் தீ விபத்து

    நெல்லை அருகே மரப்பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீயை அணைக்கும் பணியில் தீயைணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Jun 09, 2025 16:48 IST

    ஜவுளி கடை ஊழியருக்கு சிறை தண்டனை

    ஈரோட்டில் 9ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கர்பமாக்கிய ஜவுளி கடை ஊழியர் பாட்ஷாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு.



  • Jun 09, 2025 16:48 IST

    கிளாம்பாக்கத்தில் கூடுதல் பேருந்துகள்

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை



  • Jun 09, 2025 14:50 IST

    முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எதிராக புகார்

    மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி, இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வி.சி.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட இயக்கத்தினர் புகாரளித்துள்ளனர்.



  • Jun 09, 2025 14:13 IST

    ஈரோட்டில், சாலை விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

    ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே காரும், இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பூவரசன் என்ற இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.



  • Jun 09, 2025 12:55 IST

    மதுரை – தூத்துக்குடி சாலையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

    மதுரை தூத்துக்குடி சாலையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சுங்கக் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் விதித்திருந்த தடையை நீக்கியது. புதூர் பாண்டியாபுரம், எலியார்பத்தி சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



  • Jun 09, 2025 12:33 IST

    கோயில் விழா-அனுமதி கோரி பட்டியல் பிரிவினர் தர்ணா..!!

    திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் அனுமதிக்கக் கோரி பட்டியலினத்தோர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோயில் முன்பு பட்டியலின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். திட்டாணிமுட்டம் கிராமத்தில் கூத்தையனார் கோயில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி தர கோரிக்கை விடுக்கப்பட்டது.



  • Jun 09, 2025 10:55 IST

    பணி ஓய்வு பெற்று தஞ்சை திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு

    ஜம்மு காஷ்மீரில் ராணுவ எல்லை பாதுகாப்பு வீரராக பணிபுரிந்து, பணி ஓய்வு பெற்று தஞ்சை திரும்பிய துரை குமாருக்கு வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பிரமாண்ட வரவேற்பு கொடுத்த ஊர் மக்கள்.



  • Jun 09, 2025 10:30 IST

    திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ மரணம்

    திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்



  • Jun 09, 2025 09:16 IST

    மேட்டூர் அணையில் குறையாத நீர்மட்டம்

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 230 நாட்களாக 100 அடிக்கும் குறையாமல் இருப்பதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



  • Jun 09, 2025 09:07 IST

    ராமேஸ்வரம் அருகே நடைபெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு

    உச்சிப்புளி அருகே காரும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 வயது சிறுமி உட்பட இருவர் சம்பவ இடத்தில் பலியாகினர். 



  • Jun 09, 2025 09:06 IST

    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா

    மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு  ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம், காவடிகள் எடுத்து, அரோகரா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.



  • Jun 09, 2025 09:04 IST

    தஞ்சை திரும்பிய ராணுவ வீரர்

    ஜம்மு காஷ்மீரில் ராணுவ எல்லை பாதுகாப்பு வீரராக பணிபுரிந்து, பணி ஓய்வு பெற்று தஞ்சை திரும்பிய துரை குமாருக்கு வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பிரமாண்ட வரவேற்பை ஊர்மக்கள் கொடுத்தனர். 



  • Jun 09, 2025 09:03 IST

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு!

    திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: