யு.பி.எஸ்.சி. தேர்வு விடைத்தாள்கள் தபால் நிலையம் சென்ற பின் மீண்டும் கல்லூரிக்கு வந்தது ஏன்? மதுரை ஆட்சியர் விளக்கம்

மதுரையில் யு.பி.எஸ்.சி தேர்விற்கான விடைத்தாள்கள் மீண்டும் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்ட சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் யு.பி.எஸ்.சி தேர்விற்கான விடைத்தாள்கள் மீண்டும் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்ட சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
madu

மதுரையில் யு.பி.எஸ்.சி. தேர்வு... விடைத்தாள்கள் தபால் நிலையத்தில் ஒப்படைக்காமல் மீண்டும் கல்லூரிக்கு கொண்டுவந்த சம்பவம்!

மதுரையில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி, என்.டி.ஏ – என்.ஏ. தேர்விற்கான விடைத்தாள்கள் ஒப்படைப்பு தொடர்பான சிக்கல் ஏற்பட்டது. செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வை மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் சுமார் 700 தேர்வர்கள்  எழுதினர். வழக்கம்போல், தேர்வு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட விடைத்தாள்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Advertisment

ஆனால் மாலை நடைபெற்ற தேர்விற்கு பின்னர், ஒப்படைக்கப்பட்ட விடைத்தாள்கள் தபால் நிலையத்தில் வைக்கப்படாமல் மீண்டும் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தேர்வரின்  தந்தை சீனிவாசன் என்பவர் புகார் அளித்தார். இதனால் தேர்வின் நேர்மை, ரகசியத்தன்மை குறித்து சந்தேகம் எழுகிறது. முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் பீரவின்குமார் விளக்கம் அளித்தார். அதில், “தபால் நிலையத்துக்கு விடைத்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டபோது, ஒரு விடைத்தாள் சேர்க்கப்படாமல் கல்லூரியிலேயே இருந்ததாக கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்தார். 

அதன்படி, பொறுப்பாளர்கள் மீண்டும் கல்லூரிக்கு வந்து, ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட பண்டலைத் திறந்து, தவறுதலாக விடுபட்ட விடைத்தாளை சேர்த்து மீண்டும் சீல் செய்து தபால் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

Advertisment
Advertisements
Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: