டாஸ்மாக் கடையில் மோதல்; உசிலம்பட்டியில் போலீஸ்காரர் கொலை

மதுரை உசிலம்பட்டியில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் காவலர் கொலை; எஸ்.பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை

மதுரை உசிலம்பட்டியில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் காவலர் கொலை; எஸ்.பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை

author-image
WebDesk
New Update
police murder

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த 40 வயது முத்துக்குமார், உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணியாற்றி வந்தார்.

Advertisment

இன்று, பணியை முடித்துவிட்டு முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய போது, அங்கிருந்த சில அடையாளம் தெரியாதவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், முத்துக்குமார் தனது நண்பர் ராஜாராமுடன் அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்றார்.

இந்த தகவலை அறிந்த அந்த மதுக்கடையில் இருந்த கும்பல், அவர்களை தொடர்ந்து வந்து, முத்துக்குமாரை கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ளனர். அவருடன் இருந்த ராஜாராமும் தாக்கப்பட்டு கடுமையாக காயமடைந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலையை செய்தவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Police Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: