/indian-express-tamil/media/media_files/2025/09/25/madurai-lawyer-death-2025-09-25-22-32-12.jpg)
மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பாண்டிதுரையின் மகள் பிரியதர்ஷினி (19) ராமநாதபுரம் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 10 ஆம் தேதி, தனது நண்பர்களுடன் கீழ்மதுரை ரயில் நிலையத்திலிருந்து ராமநாதபுரம் புறப்பட்டபோது தவறி கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அனுப்பானடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 16 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனை நிர்வாகம், பெற்றோர் மற்றும் உறவினர்களை நோயாளியைப் பார்க்க அனுமதிக்காமல் தடுத்துவந்தது. இந்நிலையில் திடீரென பிரியதர்ஷினி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதை எதிர்த்து, மருத்துவமனை நிர்வாகம் பணத்திற்காக மூன்று நாட்கள் மாணவியை பார்க்க விடாமல், அவர் இறந்ததையும் மறைத்தது என உறவினர்கள் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனைக்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us