Advertisment

மகளிர் உரிமைத்தொகை: புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 எப்போது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்?

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் எப்போது ரூ.1000 வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
magalir urimai thogai Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் பெண்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களிலும் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு கொண்டு வந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் முக்கியக் காரணமாக இருந்தது. 

Advertisment

குடும்பத் தலைவிகள் மத்தியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு, புதிய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 

இந்த திட்டத்தில் கடந்த ஜனவரி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இனி இதுவரை விடுபட்ட பெண்களுக்கும் பணம் அனுப்பப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படும். முன்பு முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த முறை பணம் கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

அதேபோல், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படும். முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படும். 

புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்படும். இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கூடுதலாக 1.40 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளனர். 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 எப்போது கணக்கில் வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் செய்யப்படும் விண்ணப்பங்கள் அடுத்த 2 வாரங்களில் ஏற்கப்படும். அவர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு ஜூலை 12ம் தேதிக்குள் புதிய பயனாளிகள் பெயர்கள் சேர்க்கப்படும். ஜூலை 14ம் தேதி 1 ரூபாய் அனுப்பி வங்கி கணக்கில் சோதனை செய்யப்படும். ஜூலை 15ம் தேதி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள். அதேபோல் ஆகஸ்ட் மாதமும் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள். 

இந்த திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக திருமணம் ஆன குடும்ப தலைவிகள் விண்ணப்பம் செய்ய முடியும். அருகே உள்ள நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் சென்று இதற்கான விண்ணப்பங்களை பெறலாம். இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை செய்யலாம். அதை பூர்த்தி செய்து கொடுக்கலாம். நாம் பூர்த்தி செய்த விண்ணப்பத்திற்கான அத்தாட்சி செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஆக வரும். ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர், இ-சேவை மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Magalir Urimai Thogai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment