Advertisment

மகளிர் உரிமைத் தொகை ரூ 1000: முதல் தவணை எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை; எப்போது முதல் வங்கி கணக்கில் செலுத்தப்படும்; முக்கிய தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kalaignar Magalir Urimai Thogai Thittam, Magalir Urimai Thogai scheme, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் உரிமைத் தொகை ரூ 1000, வீடு தேடி வரும் விண்ணப்பம்; ஒதுக்கப்பட்ட முகாம்களில் மட்டுமே பதிவு, Kalaignar Magalir Urimai Thogai, Kalaignar Magalir Urimai Thogai application distribute to house, Kalaignar Magalir Urimai Thogai application will register in camp only

மகளிர் உரிமைத் தொகை

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ரூ. 1000 பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் ஆம் தேதி முதல் 14ஆம் தேதி 15 வரை நடைபெற்றது. இதுவரை ஒரு கோடியே 54 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் நீட் போன்ற கொடூரத் தேர்வை அகற்ற முடியும்: சுதந்திர தின உரையில் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் குறித்து ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால், பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த் துறையின் கீழ் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும், இந்தத் திட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒரு நபர், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும், அமைப்புசாரத் தொழிலாளர் நல வாரியத்திலும் முதியோர் ஓய்வூதியம் பெற்றதால், அக்குடும்பத்தில் உள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறலாம் என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ. 1000 பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி ஒரு கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. உழைக்கும் பெண்களுக்கான அங்கீகாரமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது, என்று அறிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 1000 நேரடியாக மகளிரின் வங்கி கணக்கில் வரும் செப்டம்பர் மாதம் செலுத்தப்பட உள்ளது. முதல் மாதத் தொகை செப்டம்பர் இறுதியில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment