Advertisment

ரூ. 1000, மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு; இணையதளம் முடக்கம்... சிரமப்படும் பெண்கள்

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ. 1,000 கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரே நேரத்தில் பலரும் இணையதளத்தை அணுகியதால் இணையதளம் முடங்கியது.

author-image
WebDesk
New Update
magalir urimai thogai Tamil News

ரூ. 1000, மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு; இணையதளம் முடக்கம்... சிரமப்படும் பெண்கள்

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ. 1,000 கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து, ஒரே நேரத்தில் பலரும் இணையதளத்தை அணுகியதால் இணையதளம் முடங்கியது.

Advertisment

தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, குடும்பத்த தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1,000 வங்கும் திட்டமாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. 

இதையடுத்து, தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. அதே நேரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, மகளிர் உரிமை தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்ய பலரும் இணையதளத்தை ஒரே நேரத்தில் அணுகியதால், இணையதளம் முடங்கியதால் விண்ணப்பதாரர்கள் தவித்து வருகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு திட்டத்தின் தொடக்க நாளாக கடந்த 15-ந் தேதியன்று அவர்களின் வங்கிக்கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. சில மகளிரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்படாததால் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது.

இதை சரி செய்து அவர்களின் வங்கி கணக்குகளுக்கும் விரைவில் உரிமைத்தொகை வரவு வைக்க அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அஞ்சலக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மனியார்டர் மூலமாக தொகை அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மகளிர் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெண்கள் பலரும் மேல்முரையீடு செய்ய இ சேவை மையங்களில் குவிந்து வருகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய அரசால் https://kmut.tn.gov.in என்ற இணையதளம் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. தங்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன் 1100 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த இணையதளம் ஓரிரு நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் முடங்கியதால், பலரும் சிரமமடைந்து வருகின்றனர். இணையதளம் பராமரிப்பில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Magalir Urimai Thogai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment