Advertisment

பெண்களுக்கு உரிமை தொகை : முதல்வருக்கு கோலங்கள் போட்டு நன்றி தெரிவித்த பெண்கள்

திமுக சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப பெண்களுக்கு 1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருந்தது.

author-image
WebDesk
New Update
thanks

முதல்வருக்கு கோலங்கள் போடப்பட்டு நன்றி தெரிவித்த பெண்கள்

திமுக சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப பெண்களுக்கு 1000 அவர்களின்   வங்கி கணக்கில் செலுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருந்தது.

Advertisment

 அதன்படி சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து இந்த வாக்குறுதி விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் செப்டம்பரில் பெண்களுக்கான உரிமை தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்து அதற்கான பணிகளை துவங்கியது.

 மேலும் சில குறிப்பி தகுதி நிர்ணயம் செய்யப்பட்டு பெண்களிடம் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டது.இதற்காக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்ட முகாம் ஜுலை 24"ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4"ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் ஆம் தேதி முதல் 14"ஆம் தேதி 15"வரை நடைபெற்றது. அதில்  ஒரு கோடியே 54" இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு  பதிவு செய்யப்பட்டது.

 இதில் 1"கோடியே 6"லட்சம் குடும்ப பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான உரிமை தொகை அண்ணா பிறந்த நாளான  செப்டம்பர் 15"ம் தேதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 அதன்படி பெண்கள் உரிமை தொகை இன்று முதல் வழங்கப்படுகின்றது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார் இதனிடையே சோதனை அடிப்படையில் ஒவ்வொரு குடும்ப பெண்களின் வங்கி கணக்கில் சில தொகை போடப்பட்டிருந்தது தொடர்ந்து மேலும் பெரும்பாலான குடும்ப பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் நேற்று முதல் வர துவங்கியது.

 இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் என்று திட்டத்தை துவங்கி வைக்க உள்ள நிலையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஆங்காங்கே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள காமராஜர்  வீதியில் உள்ள வீடுகளில் குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோலங்கள் போடப்பட்டு அதில் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி என எழுதி உள்ளனர்.

 மேலும் மகளிர் உரிமை தொகை  திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து தற்போது அதனை செயல்படுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது பெரிய தொகை இல்லாவிட்டாலும் எங்களுக்கு அவசர காலத்தில் அது பயன்படும் குடும்பச் செலவுகளை கவனிக்கவும் மருத்துவம் போன்ற தொடர்பான திடீர் செலவுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் இத்திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக  அப்பகுதி பெண்கள் தகவல் தெரிவித்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்தி: பி.ரஹ்மான், கோவை 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment