/tamil-ie/media/media_files/uploads/2023/07/New-Project53-1.jpg)
Coimbatore Pollachi Magna Elephant
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை வால்பாறையில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. இந்த யானை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சரளபதி பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் தென்னந் தோப்புக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-28-at-11.41.19.jpeg)
மக்னா யானையைப் பிடிக்க வனத்துறையினர் சரளபதி பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் தொடர்ந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-28-at-11.41.21.jpeg)
இந்நிலையில் நேற்று இரவு (ஜூலை 27) சேத்துமடை பகுதியில் கலா என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த மக்னா யானை அங்கிருந்த 150க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது.
#ExpressNews 150க்கும் மேற்பட்ட வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி மக்னா யானை அட்டகாசம்: பொது மக்கள் அச்சம் #Coimbatore | செய்தி: பி.ரஹ்மான் pic.twitter.com/JTxyRdy4et
— Indian Express Tamil (@IeTamil) July 28, 2023
/tamil-ie/media/media_files/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-28-at-11.41.21-1.jpeg)
ஒரு சில மரங்களை வேரோடு பிடுங்கி எரிந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் வனத்துறையினர் கும்கி யானைகளையும் வளர்ப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இன்னும் சில தினங்களில் மக்னா பிடிக்கப்படும் என வனத்துறையினிர் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.