/tamil-ie/media/media_files/uploads/2023/07/New-Project45-1.jpg)
Elephant
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானையை அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை அடர்ந்த வனப்பகுதியில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு விடப்பட்டது.
ஆனால் அங்கும் வனத்தை விட்டு வெளியேறிய அந்த மக்னா யானை பொள்ளாச்சி அருகே உள்ள சரளபதி, தம்பம்பதி, சேத்துமடை போன்ற விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. மக்களை அச்சுறுத்தி விவசாய பொருட்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையை பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் மக்னா யானையை பிடிப்பதற்காக டாப்ஸ்லிப் கோழிகமுத்தி முகாமிலிருந்து மூன்று கும்கி யானைகளை கொண்டு வந்து சரளபதியில் நிறுத்தி வைத்தனர். ஆனால் வனத்துறையினர் கும்கி யானைகளை வெறும் காட்சி பொருளாக நிறுத்தி வைத்துள்ளதாகவும். கும்கி யானைகளை நிறுத்தி வைத்தும் மக்னா யானையை பிடிக்காமல் மெத்தனம் காட்டுவதாகவும் எங்களை வனத்துறையினர் ஏமற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையிடம் கேட்டால் வனத்துறையினர் சரியான பதில் அளிக்காமல் சாக்குப் போக்கு சொல்லி காலம் கடத்துவதாகவும், எனவே இப்பகுதி மக்களின் உயிர் பலி ஆவதற்கு முன்பே மக்னா யானையைப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மேலும், கிராம மக்களை சமாளிப்பதற்காக கும்கி யானைகளை வரவழைத்து அந்த யானைகளையும் கட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் வெறும் கண்துடைப்பு செயல் செய்வதாவும்,
25க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இங்கு தங்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.