மீண்டும் வால்பாறை வந்த மக்னா: பொதுமக்கள் அச்சம்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானை மீண்டும் வால்பாறை பகுதியில் விடப்பட்டுள்ளது.

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானை மீண்டும் வால்பாறை பகுதியில் விடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Magna Elephant left in Valparai area

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானை

தர்மபுரி மாவட்டத்தில் அட்டகாசம் செய்து வந்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு டாப் சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.
அங்கிருந்து வெளியேறிய மக்னா யானை ஆனைமலை பகுதியில் அட்டகாசம் செய்து வந்தது. மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வால்பாறையில் உள்ள மானாம்பள்ளி வனப்பகுதியில் விடப்பட்டது.

Advertisment

மக்னா யானை மானாம் பள்ளியில் இருந்து வெளியேறி ஆனைமலை பகுதியில் திரும்ப முகாம் இட்டு விவசாயிகளின் பயிர்கள் வாழை தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
தொடர்ந்து விவசாயிகள் போராட்டமும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் மீண்டும் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து இரவோடு இரவாக வால்பாறையை அடுத்த சின்னக்கல்லார் தேயிலைத் தோட்ட பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் பேருந்து நிறுத்தம் இடத்தில் விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மக்னா யானை குறித்து அச்சத்தில் உள்ளனர்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: