கஜ புயல் பாதிப்பு : கேரள அரசின் உதவி வேண்டி கமல் ஹாசன் கடிதம்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள அரசும் மக்களும் உதவிகளை செய்ய முன்வர வேண்டும்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள அரசும் மக்களும் உதவிகளை செய்ய முன்வர வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கஜ புயல் கேரள அரசு

கஜ புயல் கேரள அரசு

கஜ புயல் கேரள அரசு உதவி : கஜ புயலின் தாக்கத்தினால் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்கள் அனைத்தும் பெரிய அளவிற்கு பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன.  தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சியினர், தொண்டு அமைப்பினர், மற்றும் பல்வேறு பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவிற்கு உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisment

கஜ புயல் கேரள அரசு உதவி வேண்டி கமல் ஹாசன் கடிதம்

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகர் கமல் ஹாசன், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு உதவி வேண்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் “அண்மையில் வீசிய கஜா புயல், தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அங்கு வாழும் மக்களுக்கு கேரள அரசும் மக்களும் தங்களால் இயன்ற அளவிற்கு உதவிகளை செய்திட முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

Advertisment
Advertisements

சமீபத்தில் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளம் ஏற்பட்ட போது, தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தனர். வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து வெளிவர கேரளத்தினருக்கும் இன்னும் நிறைய நாட்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Kerala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: