தமிழக அரசின் விலை இல்லா சேலையை அணிந்து போஸ் கொடுத்த மாளவிகா ஐயர்: மகிழ்ச்சி தெரிவித்த ஸ்டாலின்

தமிழக அரசின் விலை இல்லா சேலையை அணிந்து மாளவிகா ஐயர் போஸ் கொடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசின் விலை இல்லா சேலையை அணிந்து மாளவிகா ஐயர் போஸ் கொடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
stalin

ரேஷன் சேலையில் மாளவிகா - ஸ்டாலின் மகிழ்ச்சி

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் விலையில்லா வேட்டி சேலையை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது.  அந்த வகையில் இந்த வருடமும் வேட்டி சேலையை வழங்கி இருந்தது.

Advertisment

ரேசன் கடைகளில் வழங்கிய புடவையை அணிந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மாளவிகா ஐயர் சமூக சேவகர், மனித உரிமை போராளி, மாடல் என பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் சிறு வயதில், குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளையும் இழந்தார்.

இவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில் விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும் உடலில் உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்" என பதிவிட்டு இருந்தார்.

Advertisment
Advertisements

 இவரது பதிவை குறிப்பிட்டுள்ள முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், "பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


தமிழக அரசின் விலையில்லா பொங்கல் திட்டம் குறித்த நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், மாளவிகா ஐயரின் பதிவை பகிர்ந்துள்ளார். 

CM stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: