/indian-express-tamil/media/media_files/2025/07/10/vaiko-mallai-sathya-2025-07-10-21-52-04.jpg)
ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தான் 'துரோகி' என வைகோவால் இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்து ஆகஸ்ட் 2-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார். தனது 32 ஆண்டுகால பொது வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இப்பட்டம் சூட்டப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். சமீபகாலமாக மதிமுகவில் நிலவிவரும் உட்கட்சிப் பூசல்கள் வெளிப்படையாகத் தெரியவந்துள்ளன.
இந்தச் சூழலில், வைகோவின் இந்த வார்த்தைகள் மல்லை சத்யாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன. மக்கள் மத்தியில் தனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கவும், நீதி கேட்டும் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக மல்லை சத்யா கூறியுள்ளார். மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவுக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் துணைப் பொதுச்செயலாளருமான மல்லை சத்யாவுக்கும் இடையே சமீப காலமாக உட்கட்சி மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே துரோகி பட்டம் கொடுத்து வைகோ தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாக அக்கட்சியின் மல்லை சத்யா குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிகழ்வு, மதிமுகவின் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கும், மல்லை சத்யாவின் பதிலுக்கும் இடையே கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
மல்லை சத்யாவின் உண்ணாவிரதப் போராட்டம், இந்த விவகாரத்தை மேலும் பொதுவெளிக்குக் கொண்டு சென்று, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வைகோ குற்றச்சாட்டு தொடர்பாக பேசிய துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, துரோகி பட்டம் கொடுத்து கட்சியில் இருந்து என்னை வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் காட்டுகிறார்.
வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என சொல்லும் அளவுக்கு அவர் துணிந்துள்ளார் என்று ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தான் 'துரோகி' என வைகோவால் இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்து ஆகஸ்ட் 2-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக மல்லை சத்யா அறிவித்துள்ளார்.
32 ஆண்டுகால பொது வாழ்க்கையை கேள்வி குறியாக்கும் வகையில் துரோகி என சொல்லி சிறுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டிய மல்லை சத்யா நாட்டு மக்களிடம் நீதி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மல்லை சத்யா அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.