புதிய கட்சி தொடங்கினார் மல்லை சத்யா; கொடி அறிமுகம்

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா இன்று (14ஆம் தேதி) தி.மு.கவை தோற்றுவித்தவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் புதிய கட்சியை துவங்கி, கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ளார்.

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா இன்று (14ஆம் தேதி) தி.மு.கவை தோற்றுவித்தவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் புதிய கட்சியை துவங்கி, கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
mallai sathya

புதிய கட்சி தொடங்கினார் மல்லை சத்யா; அண்ணா பிறந்தநாளில் அறிவிப்பு!

தி.மு.க நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 14) மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார். ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, கடந்த ஆகஸ்ட் மாதம் வைகோவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அவரது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பல கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், இன்று அவர் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.

Advertisment

புதிய கட்சி மற்றும் கொடி

புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியின் கொடி, 75% சிவப்பு மற்றும் 25% கருப்பு நிறங்களால் ஆனது. கொடியின் வலதுபுறத்தில் 7 நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கட்சியின் பெயர், வரும் நவம்பர் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார். 

15 பேர் கொண்ட குழு

கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, மதிமுகவில் இருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மல்லை சத்யா, புலவர் சே. செவிந்தியப்பன், செங்குட்டுவன், அழகு சுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

அதே நேரத்தில், மதிமுகவின் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் உள்ள சிறுகனூரில் இன்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment
Advertisements
Sathya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: