New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/20/gCzl9aK2BBtc9OzGkb3T.jpg)
ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, தாம் என்றுமே வைகோவின் சேனாதிபதி என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவை தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
'நான் என்றுமே வைகோவின் சேனாதிபதி' என்று ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கட்சியில் துரை வைகோ மற்றும் மல்லை சத்யா ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று (ஏப்ரல் 19) ம.தி.மு.க முதன்மை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்தார்.
இந்நிலையில், ம.தி.மு.க-வின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த சூழலில் திராவிட இயக்கப் போர்வாளாக விளங்கும் வைகோவிற்கு, தாம் சேனாதிபதியாக இருப்பதாக மல்லை சத்யா குறிப்பிட்டுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் ஈஸ்டர் பெருநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பதிவில் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், "நான் திராவிட இயக்கப் போர்வாள் புரட்சிப் புயல் தலைவர் திரு வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளம், என் மோதிர விரலில் தலைவர் திரு வைகோ எம்.பி அவர்களின் முகம் பதித்த மோதிரம், சட்டைப் பாக்கெட்டில் அவரின் புகைப்படம். இதுதான் என் அடையாளம் மகிழ்ச்சி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.