New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/19/cashew-arrest-2025-06-19-16-35-18.jpg)
முந்திரி பயிர் வாங்கி கொண்டு ரூ.54 லட்சம் பணத்தை தராமல் மோசடி செய்த நபர் மாவட்ட குற்ற பிரிவு போலீசாரால் இன்று கைது செய்தனர்.
பண்ருட்டி அருகே 7 பேரிடம் முந்திரி பயிர்களை வாங்கிக் கொண்டு ரூ.54 லட்சம் பணத்தை தராமல் மோசடி செய்தவரை கடலூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முந்திரி பயிர் வாங்கி கொண்டு ரூ.54 லட்சம் பணத்தை தராமல் மோசடி செய்த நபர் மாவட்ட குற்ற பிரிவு போலீசாரால் இன்று கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி, தெற்கு சாத்திப்பட்டு, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமாரி (47. இவர் கடலூ மாவட்ட எஸ்.பி-யிம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், குமாரி என்ற பெயரில் அரசு அங்கீகாரம் பெற்ற முந்திரி கம்பெனி வைத்து நடத்தி வருகிறேன். எங்கள் நிறுவனத்தில் சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரது மகள் வினோலியா, மகன் ஆனந்தராயர், மனைவி ரெஜினாமேரி மற்றும் உறவினர்கள் ஒன்றாக சேர்ந்து தன்னிடம் 28 லட்சம் ரூபாய்க்கு முந்திரி பயிர் வாங்கிக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றி வந்தார்கள். பணத்தைக் கேட்டபோது வங்கி காசோலை கொடுத்துள்ளனர். காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று வங்கியில் திருப்பி கொடுத்து விட்டார்கள்.
இதேபோன்று, சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன், அன்பரசன், இளங்கோவன், சீனிவாசன், பழனி, வெங்கடேசன் ஆகியோர்களிடம் இருந்து 26 லட்சம் ரூபாய்க்கு முந்திரிப் பயிர் வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. ஆக மொத்தம் 54 லட்சம் ரூபாய் பணத்தை தராமல் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்தனர். இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, உதவி ஆய்வாளர் லிடியாசெல்வி தீவிரமாக விசாரணை செய்து ஆரோக்கியசாமி (51) ஏமாற்றியது தெரிய வந்துள்ளது உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.