Advertisment

கேஸ் ரெகுலேட்டரில் தங்கம் கடத்தல்... வசமாக சிக்கிய திருச்சி வாலிபர்!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணி ஒருவர் கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் தங்கக் கட்டிகளை உருண்டை வடிவில் எடுத்து, கடத்தி வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
man caught smuggling 15 lakh worth gold at Trichy airport Tamil News

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணி ஒருவர் கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் தங்கக் கட்டிகளை உருண்டை வடிவில் எடுத்து, கடத்தி வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான விமானத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விமான நிலையத்தை பயணிகள் மற்றும் தொழில் சார்ந்த பயனாளிகள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இப்படி பயணிக்கையில் பல்வேறு நபர்கள் பல்வேறு பொருட்களை கடத்தி வருவது வாடிக்காக உள்ளது.

Advertisment

அந்தவகையில், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் பயணிகளுடன் வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளை விமானம் நிலைய வாண் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். 

அப்போது பயணி ஒருவர் கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் தங்கக் கட்டிகளை உருண்டை வடிவில் எடுத்து, கடத்தி வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 194 கிராம் ஆகும் . இதன் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சத்து 12ஆயிரத்து 424 ரூபாயாகும்.தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல். 

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment