Advertisment

விநாயகர் ஊர்வலத்தில் புர்கா நடனம்: இளைஞர் கைது

விசாரணையில், சம்பவத்தன்று புர்கா அணிந்து நடனம் ஆடியது காட்பாடி விருதாம்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்தது. இது குறித்து செப்.21ஆம் தேதி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Man Dances Wearing Burqa

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் புர்கா உடை அணிந்து நடனம் ஆடிய இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.

Man Dances Wearing Burqa : தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஒன்றில் இளைஞர் ஒருவர் புர்கா அணிந்து நடனம் ஆடிய காட்சிகள் வைரலாகின. இது குறித்து செப்.21ஆம் தேதி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

Advertisment

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தினார்கள். இந்த விசாரணையில், சம்பவத்தன்று புர்கா அணிந்து நடனம் ஆடியது காட்பாடி விருதாம்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பந்தப்பட்ட இளைஞர் மீது இரு சமூகத்தினர் இடையே நல்லிணக்கத்துக்கு தீங்கிழைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செப். 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தற்போது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

vinayagar chaturthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment