/tamil-ie/media/media_files/uploads/2019/09/death.jpg)
கண்ணகி நகரை சேர்ந்த ஜோதி, நேற்று தான் வேலை பார்க்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் ஏரியாவில் தூங்கிய போது எதிர்பாராத விதமாக மிகவும் பரிதாமாக உயிர் இழந்துள்ளார்.
போயஸ் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றும் ஜோதி, வேலைப்பளுவின் காரணமாக வீட்டிற்கு செல்லாமல் அந்த குடியிருப்பில் உள்ள பார்க்கிங் ஏரியாவில் தூங்குவார் . கடந்த, திங்கள் இரவு 8 மணிக்கு வழக்கம் போல் தூங்கியிருக்கிறார். அன்று இரவு 10.30 மணியளவில் அந்த குடியிருப்பில் வசிக்கும் ராகுல் ரெட்டி அந்த பார்கிங் ஏரியாவில் மிகவும் வேகமாக தனது காரை ஓட்டிய போது, ஜோதியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து ஜோதியை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். இருந்தாலும், காப்பாற்ற முடியவில்லை.
போலிஸ் அதிகாரி ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில், "தூக்கத்தில் ஜோதி சற்று உருண்டு பார்க்கிங் ஏரியாவில் வாகனங்கள் செல்லும் மைய இடத்திற்க்கு வந்திருக்கலாம். இருந்தாலும், ராகுல் ரெட்டி கவன குறைவாக வண்டி ஓட்டியுள்ளார் . இந்திய தண்டனை சட்டம் 304( A ) கீழ் ராகுல் ரெட்டியின் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர் .
இது குறித்து , போலிஸ் மேலும் விசாரித்து வருகின்றனர். அங்குள்ள மக்களிடமும், சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளையும் விசாரித்து வருகின்றனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.