மாண்டஸ் புயல் எச்சரிக்கை : மாண்டஸ் புயல் - 16 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக 16 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக 16 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Rain

மழைக்கு வாய்ப்பு

மாண்டஸ் புயல் காரணமாக 16 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ள நிலையில்,  இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவு புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால் பொதுக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும், அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு புயல் எச்சரிக்கை அதிகம் உள்ள மாவட்டங்களில் இரவு நேர பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்றும்,தெரிவிக்கப்பட்டுள்ளது.புயல் கரையை கடக்கும் சமயத்தில் பலத்த மழை பெய்யும் என்பதால் வட தமிழகத்திற்கு ஆரஞ்கு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் நாளை பல மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம் திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இதனிடையே மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை பல்கலைகழகம், மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வுகளும் ஒத்திவைக்கப்டுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும் வனத்துறை சார்ந்த பணிகளுக்கு நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: