By: WebDesk
March 24, 2018, 2:39:50 PM
அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளராக மனோஜ்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவர் இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் ஆசியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகின்றனர். டெல்லியில் 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்பது வேறு வகையான வழக்கு. தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு வேறு வகையான வழக்கு. சபாநாயகர் தீர்ப்பே நியாயமானது, அதுவே இதில் வெற்றி பெறும்.
இந்த ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் நிச்சயம் நடக்கும். அதிமுகவின் ஆட்சி அதன் பின்னரும் தொடரும். ஜெயலலிதா மரணத்தில் யாருக்காக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் அதில் இருந்து தப்ப முடியாது. பொறுத்திருந்து பாருங்கள் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். பொய் சொன்னவர்கள் விரைவில் மாட்டிக்கொள்வார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Manoj pandian about jayalalaitha death