/indian-express-tamil/media/media_files/nqRwx8DT2ogIfOh6OWQC.jpg)
சென்னைக்கு சென்றால்தான் நான் இயக்குநர், மக்களின் கதறலுக்கு உதவ வேண்டும் என்பதே முதல் பணி என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
” நான் இயக்குநர் இல்லை. இது என் ஊர் மற்றும் எனது மக்கள். இயக்குநராக இல்லாவிட்டாலும் கூட இப்படித்தான் அலைந்திருப்பேன்.. சினிமா பற்றி தற்போது மறந்துவிட்டது. அவர்கள் சொல்லும்போதுதான் நினைவுக்கு வருகிறது. சென்னைக்கு சென்றால்தான் நான் இயக்குநர்.
ஊரில் இருப்பவர்கள், உதவி கேட்கிறார்கள். அதற்குதான் இப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எப்படியாது மீட்க வேண்டும் என்று மக்கள் கதறுகிறார்கள். நான் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்தேன். உதயநிதி சாரிடம் பேசினேன். அவர் உடனடியாக உதவிக்கு இங்கு வந்தார். அவர் சேலத்தில் இருந்தார். நான் போனில் அழைத்து இங்கே நிலை மோசமாக உள்ளது என்று கூறினேன். திருநெல்வேலியை பார்வையிட்ட பிறகு இங்கே வந்தார். அவரிடம் அவ்வளவு விவரங்களையும் விளக்கி சொன்னேன். உள்ளே செல்வதே பெரிய விஷயம் என்று சொன்னேன். முழுவதும் நீரால் சூழப்பட்ட பகுதி. இங்கே நீரை நம்பித்தான் மக்களே வாழ்கிறார்கள். இங்க நீர் என்பது பயம் இல்ல.
அவர்களுக்கு பிடித்த விஷயம். ஆனால் இவ்வளவு நீரை எதிர்பார்க்கவில்லை. அவர் வந்ததும் அதிக உதவிகள் கிடைத்தது. அவர் வரும் வரை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தோம். அவர் வந்ததும் உடனே வேலை நடந்தது. அதிக வேலை வேகமாக நடந்தது” என்று கூறினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.