/tamil-ie/media/media_files/uploads/2018/04/Marina_Beach_as_seen_from_Light_house.jpg)
Marina Protest, Permission Granted, Ayyakannu
காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி அய்யாகண்ணு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி டி.ராஜா முன் விசாரணையில் உள்ளது. மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மெரினாவில் அரசின் அனுமதியுடன் கடைசியாக எப்போது போராட்டம் நடந்தது என அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு போராட்டத்தை தவிர 2003-ம் ஆண்டிற்கு பின் மெரினாவில் போராட்டங்கள் நடைபெறவில்லை என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.
இதையடுத்து, காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா என கேள்வி எழுப்பிய நீதிபதி, வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை தினங்களில் லட்சக்கணக்காண மக்கள் கோவில், தேவாலயங்களில் வழிபாடு செய்கின்றனர். அந்த கூட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை என கூறி மக்கள் அந்த பண்டிக்கைகளை கொண்டாட கூடாது என கூற முடியுமா? எனவும் கேட்டார்.
மேலும், போராட்டங்களை ஒழுங்கப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. போராட்டங்களை தடுக்க அரசுக்கு எந்த அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தார். பின், வழக்கின் தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.