சென்னை மெரினா லூப் ரோட்டில், மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் மீனவர்கள் ஆகியோர் மத்தியில் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறவுபடுத்த வந்தனர். இதை எதிர்த்த மீனவர்கள் சாலையை மறித்து, கடைகளை அகற்ற விடாமல் போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் மீன்பிடி படகுகளுடன் சாலையை மறித்து, கடல் உணவுகளை சாலையில் வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதிகாரிகள் ஒரு சில கடைகளை அகற்றும் போது, குடியிருப்பாளர்கள் கடுமையான எதிர்ப்பை வழங்கியதால் அவர்களால் அதிகம் அகற்ற முடியவில்லை.
கடந்த செவ்வாய்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைக்குப் பிறகு, லூப் சாலையில் உள்ள நடைபாதைகளில் இருந்த சுமார் பத்து ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி புதன்கிழமை அகற்றியது. அப்போதிருந்து, அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சித்து வருகின்றனர், ஆனால் பெரிய அளவில் அதை நிறைவேற்ற முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
திங்கள்கிழமை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மூத்த அதிகாரிகள், லூப் சாலையின் மேற்குப் பகுதியில் (கடற்கரை அல்லாத பக்கம்) 21 பங் ஸ்டால்கள், 15 குடிசைகள், 75 தற்காலிக ஆக்கிரமிப்புகள் மற்றும் உணவகங்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர்.
நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய சிறப்பு சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் சமீபத்தில், ‘சிங்கார சென்னை’ என்பது அதிகாரிகளின் குறிக்கோளாக உள்ளதா என்றும், அவர்கள் எப்படி ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
நடைபாதைகளை கூட விட்டுவைக்காமல், சாலைகளில் மக்கள் கழுவி சுத்தம் செய்வதை தாங்கள் பார்த்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
லூப் ரோட்டில் போக்குவரத்தை சீர்செய்யும் வகையில், நொச்சிக்குப்பத்தில், 235 கடைகளுடன், சலவை மற்றும் வாகனம் நிறுத்தும் இடம் உட்பட, மாநகராட்சி மீன்பிடி சந்தையை கட்டி வரும் நிலையில் இருப்பதாக கூறினார், அதற்கு மீனவர்கள் வெளியேற மறுப்பு தெரிவித்தனர்.
“மக்கள் வாங்குவதற்கு வசதியாக இருப்பதால் சாலையில் மட்டுமே மீன்களை விற்க முடியும். இரண்டாவதாக, லூப் ரோடு வருவதற்கு முன்பே நாங்கள் இங்கு விற்பனை செய்து வருகிறோம். ஆக்கிரமிப்புகளை அகற்றும் நிலை குறித்து மாநகராட்சி உயர் நீதிமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும்”, மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil