கன்னியாகுமரி மாவட்டத்தில் தீர்க்கப்படாத நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7ஆம் தேதி 20 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பான அடையாள நடைபயணம் கொல்லங்கோடு, களியக்காவிளை, பனச்சமூடு, கன்னியாகுமரி ஆகிய நான்கு இடங்களில் இருந்து செங்கொடி உடன் புறப்பட்டது.
இந்த ஊர்வலம் மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் உள்ள வடசேரி அண்ணா விளையாட்டு திடல் முன்பு நிறைவடைந்தது. அதன் பின்நடைபெற்ற கோரிக்கை மாநாட்டிற்கு குமரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், முன்னாள் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.பி.பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ், செயலாளர் அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணன், “இந்திய மக்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த மோடி அரசு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு, அதானி, அம்பானிக்கு அடிமை சேவகம் செய்யும் நிலையில் உள்ளது.
மோடியின் ஆட்சியின் தொடக்க காலத்தில் அதானி யின் சொத்து ரூ.63 ஆயிரம் கோடி மட்டுமே. இன்று உங்கள் ஆட்சி முடியபோகும் காலத்தில் அதானி யின் சொத்தின் மதிப்பு ரூ.23 லட்சம் கோடி யாக உயர்ந்துள்ளது.
கார்டினல் பத்திரிகை நேற்று முன்தினம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. இ.டி, சிபிஐ, அமலாக்கதுறை, வருமான வரித்துறை,செபி எல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறது
ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி மூன்றாவது கூட்டம் மும்பையில் நடந்ததை கண்டு மோடிக்கு பயம் வந்து விட்டது. கடந்த ஆண்டுகளாக வராத சகோதிரி பாசம் இந்த ஆண்டு வந்ததால் கியாஸ் சிலின்டர் விலையை ரூ.200.00குறைத்துள்ளதாக சொல்வதெல்லாம் பொய். இந்தியா கூட்டணியை கண்டு ஏற்பட்டுள்ள பயம்” எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“