காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டம் சார்பில் ஓட்டேரி மேம்பாலம் அருகே மாவட்ட செயலாளர் எல்.சுந்தர்ராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமகிருஷ்ணன், டி.கே.சண்முகம், சி.திருவேட்டை, ஆர்.லோகநாதன், ராணி, விஜயகுமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.