Advertisment

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்கள் உஷார்; சுட்டெரிக்க போகும் வெயில்!

“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 1ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்; அடுத்த 5 நாட்களுக்கு அதிகப்பட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
heat

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகப்பட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Chennai Weather Report | சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி, காயல்பட்டினம், கன்னியாகுமரி, கருப்பாநதி அணை (தென்காசி) ஆகிய இடங்கனில் தலா 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

Advertisment

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிகப்பட்சமாக 39.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இயல்பை விட அதிக வெப்பம், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கரூர் மற்றும் ராமநாதபுரம் மற்றும் புதுசசேரி பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

குறைந்தப்பட்ச வெப்பநிலை நாமக்கல்லில் 19.0 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. 

இந்த நிலையில், மார்ச் 29 முதல் ஏப்.1 வரை தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். ஏப்.2ஆம் தேதி மற்றும் 4ஆம் தேதிகளில் தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். அதேநேரத்தில் மார்ச் 29 முதல் ஏப்.2 வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரி அதிகரிக்கக் கூடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai Weather Report
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment