மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை இன்று முதல் தொடக்கப்பட்டதால் ரயில் பயணிகள் சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள்: சென்னை ஐகோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க ரூ3 கோடி ஒதுக்கீடு; ஸ்டாலின் அறிவிப்பு
மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து, இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த ரயிலை ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“